சிவகுரு என்பது அவருடைய இப்போதைய ஞானப் பெயர். முதலில் அவரது பெயர் சிவச்சந்திரன் என்று சாதாரணமாக இருந்தது. தனக்குத் தானே ஞானம் கிடைத்ததாக அவசரக் குடுக்கை போல் எண்ணியதால் அவர் சந்திரனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சிவத்தை மாத்திரம் முதலில் எடுத்தார். பின்பு அதை மெருகூட்டக் குருவைச் சேர்த்துக் கொண்டார். கடைசியாக மொத்தமாகச் சிவகுரு என்று தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டார்.